‘பெத்தவன்’: தலித் இலக்கியத்தில் ஒரு சாதனை

ஒருவர் ஒரு குடும்பத்தில் எவ்வாறு பிறக்கிறாரோ அதுபோலவே ஒரு சாதியில் பிறக்கிறார். குடும்பத்தில் ஒரு தனிநபர் எவ்வாறு ஓர் அலகாக இருக்கிறாரோ அதுபோலவே சாதியக் குழுமத்தில் குடும்பம் ஓர் அலகாகிறது. ஒவ்வொரு குடும்பமும் சாதி என்ற கருத்தோடு கொள்ளும் உறவே குறிப்பிட்ட சாதியை நிலைநிறுத்துகிறது. ஒரு தனிநபருக்கும் சாதிக்கும் இடையேயான உறவானது குடும்பத்தின் ஊடாகவே சாத்தியப்படுகிறது. — சீனிவாச ராமாநுஜம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனைக் காதலித்து அவனோடு ஓடிப்போவதற்கு மூன்று முறை முயன்ற பெண்ணின் அப்பா, நாளைக்குள் … Continue reading ‘பெத்தவன்’: தலித் இலக்கியத்தில் ஒரு சாதனை

‘ஜெய்பீம்’: ஒரு சமூகப் பிரச்சினை எப்போது துப்பறியும் கதையாகிறது?

ర “கொலையோடு சம்பந்தப்பட்ட எல்லா மனிதரும் குற்றவாளிதான். …வளர்ச்சியடையாத முதலீட்டியச் சமூகங்களில் ஒவ்வொருவரும் கொலைகாரராக இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு நேர்மையான மனிதர் சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்று ஒன்று இதில் கிடையவே கிடையாது. அமைப்பு ஒவ்வொருவரையும் கொலைகாரராக்குகிறது. எது முக்கியமான கேள்வியாகிறது என்றால், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் நீங்கள் குற்றவாளியா இல்லையா என்பது மட்டும்தான்.” — ஜி.பி.தேஷ்பாண்டே, ‘தி டெக்ஸ்ட் அண்ட் தி ப்ளே’. ర ‘ஜெய்பீம்’ திரைப்படம் உருவாக்கிய விவாதங்களெல்லாம் தமிழ்ச் சூழலில் அபூர்வம். … Continue reading ‘ஜெய்பீம்’: ஒரு சமூகப் பிரச்சினை எப்போது துப்பறியும் கதையாகிறது?

[தமிழும் நடையும்] எங்கும் ‘செய்’மயம்

நம்முடைய செயல்பாடுகளோடு தொடர்புடையது வினைச்சொல். ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நுட்பமாக வேறுபடுத்துகிறோம் என்பதும், அப்படி வேறுபடுத்துவதற்கு ஏற்ப ஒரு மொழியில் விதவிதமான சொற்கள் இருப்பதும் முக்கியமான விஷயம்.  அப்படிப் பார்க்கும்போது, ஒரு மொழியின் பலம்மிக்க அம்சமாக வினைச்சொல்லுக்கு முக்கிய இடமுண்டு. விவசாயம் தொடர்பான ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நம் மொழியில் வெவ்வேறு சொற்கள் உள்ளதை இங்கே நினைவுகூரலாம். அப்படியான முக்கியத்துவம் கொண்ட வினைச்சொல் பயன்பாட்டில், நவீனத் தமிழ் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. அதுகுறித்துப் பார்க்கலாம். தமிழ் வினைச்சொல்லுக்கு இயல்பாகத் … Continue reading [தமிழும் நடையும்] எங்கும் ‘செய்’மயம்

[தமிழும் நடையும்] இரண்டு பெயர்கள்

ஒரே வாக்கியத்தில் இரண்டு பெயர்ச்சொல் வரும்போது இரண்டையும் அடுத்தடுத்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி: மோகன் ப்ரியங்காவிடம் பேச விரும்பினார். இதில் பிழை ஏதும் இல்லை. ஒன்று ஆண்பால் பெயராகவும், இன்னொன்று பெண்பால் பெயராகவும் இருப்பதால் நாமே நிறுத்தி வாசித்துக்கொள்கிறோம். ஆனால், இந்த வாக்கியங்களைப் பாருங்கள்: ப்ரியங்கா மோகனிடம் பேச விரும்பினார்.பாலாஜி மோகனிடம் பேச விரும்பினார்.டோடோ அசுவாகாவிடம் பேச விரும்பினார். இப்படி வந்தால் என்னவாகும்? ப்ரியங்கா மோகன், பாலாஜி மோகன், டோடோ அசுவாகா — ஒரே பெயரா … Continue reading [தமிழும் நடையும்] இரண்டு பெயர்கள்

தமிழும் நடையும்

அவசரம் நம் காலத்தின் குணங்களுள் ஒன்று. துரித உணவு தொடங்கி துரிதச் செய்திகள், துரிதப் புத்தகங்கள் என எங்கும் அவசரம். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக வேகமாகச் செய்துவிடும் எண்ணம் வளர்ந்திருப்பதால், தவறுகள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. அதனாலேயே, அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வளர்ந்திருக்கிறது. ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இடம்பெறும் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் – தலைப்புச் செய்திகள் உட்பட, செய்தித்தாள்கள், ஆளுமைகளின் ட்வீட்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் போன்ற முக்கியமான இடங்களில்கூட பிழைகள் … Continue reading தமிழும் நடையும்

பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் – பா.வெங்கடேசன் பேட்டி

‘அருஞ்சொல்’ இதழில் வெளியான பேட்டி இது. பாரதி உங்களுக்கு எப்போது அறிமுகமாகிறார்? என்னுடைய எட்டாவது வயதில். மதுரை தானப்ப முதலி தெரு அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் பாரதியைப் பற்றி ஒரு வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு முன்பாகவே ‘பாப்பா பாட்டு’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாரதி அறிமுகமாகியிருந்தாலும், பாரதி என்ற பிரக்ஞை உள்ளே வந்தது அந்த வில்லுப்பாட்டிலிருந்துதான். முதலில், வில்லுப்பாட்டில் ஒரு சுள்ளானாக அமர்ந்திருந்தேன். வேறொரு பையன் வில்லுப்பாட்டு பாடுபவனாக இருந்தான். அவன் அதைச் … Continue reading பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் – பா.வெங்கடேசன் பேட்டி

பிராணிகள் மீதான உண்மையான அக்கறை எது?

தரணி ராசேந்திரனின் முதல் நாவலான ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ எழுப்பும் ஆதாரக் கேள்வி இதுதான்: பிராணிகள் மீதான உண்மையான அக்கறை எது? பிராணிகளை ஆசையாக வீட்டில் வளர்ப்பவர்களும், பிராணிகளின் நலனுக்காகச் செயல்படும் ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளும், அரசுத் துறைகளும் தங்களை மறுபரிசீலித்துக்கொள்ள வழிகாட்டுகிறார்கள் நாவலின் நாயகன் பாலாவும் அவனுடைய அம்மாவும். விலங்குகள் மீதான அக்கறை எல்லைக்குள் இருக்கும் இந்தச் சிறுபான்மையினரோடும், பிராணிகளை ஒரு பொருட்டாகவே தங்கள் அன்றாடத்தில் கொண்டிராத பெரும்பான்மையினரோடும் இருவேறு தளங்களில் இந்நாவல் உரையாட … Continue reading பிராணிகள் மீதான உண்மையான அக்கறை எது?

ஓலம் – இறகு – சின்னக்குடை

ஒடுக்கப்பட்டவர்களின் புதிய பிரச்சினை மராத்திய எழுத்தாளரும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான சரண்குமார் லிம்பாலே, ‘தலித் பார்ப்பனன்’ நூல் மொழிபெயர்ப்பு வழியாக ஏற்கெனவே தமிழ் வாசகர்களிடம் பரிச்சயமானவர். அவரது ‘ஓலம்’ நாவலை இப்போது தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் ம.மதிவண்ணன். ஒடுக்கப்பட்டவர்கள் சாதிரீதியாகத் தாங்கள் எதிர்கொண்டுவரும் தீண்டாமையையும் வன்முறையையும் இழிவுகளையும் விவரிப்பது தலித் இலக்கிய வகைமையில் முக்கியமான அணுகுமுறையாக இருந்துவருகிறது. இந்த நாவலோ வேறொரு முக்கியமான புள்ளியைத் தொடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும், அவர்களுடைய அதிகாரத்துக்காகத் துணைநிற்கும் இயக்கங்களைக் கண்டு, ஆதிக்கச் … Continue reading ஓலம் – இறகு – சின்னக்குடை

‘கதீட்ரல்’: தூயனின் உவமைகள்

உவமையைப் பயன்படுத்தாத புனைவாசிரியர்கள் அபூர்வம். கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்தப் பெருங்கூட்டத்தில், தனித்துவமாக உவமைகளைக் கையாளும் நபர்களில் ஒருவராக இருக்கிறார் தூயன். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’யிலும் அலாதியான படிமங்களை உருவாக்கியிருந்தார். ‘பேருந்துகள் பன்றியின் முலைப்பால் குடிக்க முண்டும் குட்டிகளாக இடம் கிடைக்காமல் திணறியபடி ஒன்றொடொன்று முட்டிக்கொண்டிருந்தன’, ‘மாட்டின் கருத்த மூக்குபோன்ற பழைய பாணி உருண்டை சுவிட்சுகள்.’ இப்படியான உவமைகளெல்லாம் மனப்பாடமாகும் அளவுக்குப் பதிந்துபோய்விட்டன. தூயனின் உவமைகளில் கவனம் ஈர்க்கும் விஷயம் என்னவென்றால், அவை … Continue reading ‘கதீட்ரல்’: தூயனின் உவமைகள்

சமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது?

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான சமூக ஆய்வாளரும், இடதுசாரி அறிவுஜீவியுமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் சமீபத்திய புத்தகம், ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’. இறந்தோரையும் முன்னோரையும் வழிபடும் வழக்கம், அந்த வழிபாட்டு முறையில் ஏற்பட்ட சிதைவுகள், அவ்வழிபாட்டின் எச்சங்கள் ஆகியவற்றைச் சங்க காலப் பாடல்கள் வழியாகவும், புராணங்கள் வழியாகவும், நாட்டார் கதைகள் வழியாகவும் ஒரு புனைவுக்கே உரிய சுவாரஸ்யமான விவரணைகளோடு எடுத்துரைக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். அவர் இதுவரை நமக்குத் தந்திருக்கும் அற்புதமான கொடைகளுள் இப்போது இன்னொன்று … Continue reading சமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது?